![]() |
| ஊட்டி எரி |
உதகமண்டலம் (UDHAGAMANDALAM) நீலகிரி மாவட்டதின் தலைநகரம் ஆகும். இது ஊட்டி, உதகை என்றும் அழைக்கப்படுகிறது.
12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின் ஆட்சி புரிந்தனர். பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைவசம் மாறியது.
அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுநர், ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார்.
![]() |
| ஊட்டி படகு இல்லம் |
ஆங்கிலேயரின் ஆட்சியில் நல்ல வளர்ச்சியைக் கண்ட இப்பகுதி அவர்களுடைய கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.
![]() |
| உதகமண்டலம் |
ஊட்டி தாவரவியல் பூங்கா(Ooty botanical gardens)1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.
இதன் அருகில் தொட்டபெட்டாசிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
![]() |
| உதகமண்டலம் |
தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 -2,500 மீட்டர்கள் வரை இருக்கும். இப்பூங்காவை தமிழ்நாடு தோட்டகலை வளர்ச்சி முகாம் (மால்) பராமரிக்கப்படுகிறது.
பைகாரா நீர்வீழ்ச்சி இம்மாவட்டத்திலேயே பெரிய ஆறு இதுதான். இந்தப் பகுதியின் பூர்வகுடிகளான தோடர் இனப் பழங்குடி மக்கள் இதைப் புனித நதியாகப் போற்றுகின்றனர். முக்குர்தியின் உச்சியிலிருந்து புறப்படும் இந்த பைகாரா ஆறு வடக்குப் பக்கமாகப் பரவி ஓடுகிறது.
.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*)




